Saturday, April 7, 2018

அகர்தலா செயற்குழு முடிவுகள்


அகர்தலா மத்திய செயற்குழு முடிவுகள்
நமது சங்கத்தின் மத்திய செயற்குழு 03.04.2018 முதல் 05.04.2018 வரை அகர்தலாவில் சிறப்பாக நடைபெற்றது. ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆழமான விவாதங்கள் நடைபெற்றது. 

ஊழியர் கோரிக்கைகளில் BSNL நிர்வாகத்தின் இன்றைய மெத்தன போக்கு, தேங்கியுள்ள ஊழியர் தரப்பு கோரிக்கைகள், BSNLல் செய்யப்படும் தேவையற்ற  செலவினங்கள், ஊழியர் பற்றாக்குறை, Outsourcing, பொதுவான பிரச்சனைகள் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 03.05.2018 அன்று கோரிக்கை தினம் அனுஷ்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அன்று நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ்  அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.  

"கோரிக்கை தின" கோரிக்கைகள்:

01. BSNL பணிகளை அவசர கதியில் Outsourcing முறையில், தனியாருக்கு தாரைவார்க்காதே!

02. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்து!

03. மருத்துவ சலுகைகளை பறிக்காதே!

04. ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாதே!

05. Sr.TOA கேடரில் புதிய பணி நியமனம் செய்!

மத்திய செயற்குழு முடிவுகளை கறாராக அமுல்படுத்துவோம்....

ஊழியர் நல கோரிக்கைகளை வென்றெடுப்போம்!

தோழமையுடன்,
பொன். கிருஷ்ணன்
மாவட்ட செயலர்